"உலகில் நல்ல வாழ்க்கைக்கு எது தேவை ?"
என்று கேட்டார் ஒருவர்.
"வேலை" என்று வேதனையோடு சொன்னான்
வேலையில்லாப் பட்டதாரி,
"குழந்தை" என்று குரல் கொடுத்தனர்
இருவர் மட்டுமே வாழும் ஒரு வீட்டிலிருந்து,
"காதல்" என்றான் ஒரு பித்தன்,
"ஆரோக்கியம்" என்றான் நெடு நாள் நோயாளி,
"கண்கள்" என்றனர் குருடர்,
"முயற்சி" என்கிறேன் நான்,
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
Saturday, August 20, 2005
Saturday, August 13, 2005
துளிர்க்குமா ?
ஒட்டிக்கொண்ட உதடுகளை திட்டிப் பிரித்து,
சொல்ல நினைப்பதை ஆயிரம் முறை சொல்லிப் பார்த்து,
துடிக்கும் இதயத்தை கையில் பிடித்து
நீ வரும் வழியில் காத்திருக்கிறேன் !
நீ உதிர்க்கும் ஒரு புன்னகையில்
அத்தனையும் மறந்துவிட்டு நானும் புன்னகைக்கிறேன் !
அட, இன்றும் துளிர்க்க மறுத்துவிட்டதே என் முயற்சி விதை
இன்னும் கொஞ்சம் தைரியம் ஊற்றிப் பார்க்கிறேன்,
நாளையாவது துளிர்க்குமா என்று காத்திருக்கிறேன் !
சொல்ல நினைப்பதை ஆயிரம் முறை சொல்லிப் பார்த்து,
துடிக்கும் இதயத்தை கையில் பிடித்து
நீ வரும் வழியில் காத்திருக்கிறேன் !
நீ உதிர்க்கும் ஒரு புன்னகையில்
அத்தனையும் மறந்துவிட்டு நானும் புன்னகைக்கிறேன் !
அட, இன்றும் துளிர்க்க மறுத்துவிட்டதே என் முயற்சி விதை
இன்னும் கொஞ்சம் தைரியம் ஊற்றிப் பார்க்கிறேன்,
நாளையாவது துளிர்க்குமா என்று காத்திருக்கிறேன் !
Subscribe to:
Posts (Atom)