Monday, October 17, 2005

தோழிக்கு சில வரிகள்...

முதுகெலும்பில்லாதவன் ஓடி மறைந்துவிட்டான்
உறவுகள் இறுக்கியதில் உலர்ந்துவிட்டான்
நம்பிய நீ திகைத்தது உண்மைதான்
ஆனால்
புதுக்கவிதை நீ புதைந்தா போனாய்?
புரட்சிக்கவிதையாக அல்லவா மலர்ந்தாய் !

காயம் சுமக்கும் உனக்குச் சொல்ல
வார்த்தைகள் ஏதும் என்னிடம் இல்லை,
இந்த வரிகள் மருந்தாகிடும் என்று
நான் எண்ணவும் இல்லை.

காலம் ஆற்றிய காயங்களில்
ஒன்றாகிப் போகும் இதுவும்.
அதுவரை, எல்லாம் தாங்கி
சுற்றி வளைக்கும் சோகக்கூட்டை உடைத்து,
சிறகுகள் வளர்த்து,
சீக்கிரம் பட்டாம்பூச்சியாகிடு என் தோழி...