Sunday, June 19, 2005

அழியாத சுவடுகள்

விருட்சத்தைத் தந்துவிட்டு கரைந்துவிட்ட விதை போல்
காதலை தந்துவிட்டு விலகிவிட்டாய்
உன்னைப் பிரிந்த பின்புதான் இதயம் உண்மையில் துடிக்க ஆரம்பித்தது
ஏக்கத்தில் வெடிக்கும் ரத்த நாளங்களை என்ன சொல்லி அடக்குவது?

கரைந்துவிட்ட கனவுகளையும்
உறைந்துவிட்ட உணர்வுகளையும்
எங்கு சென்று புதைப்பது?

உன்னைப் பற்றி சிந்திக்க மறுக்கிறேன்
உன் நினைவுகளிலிருந்து தப்பிக்க முயல்கிறேன்
இது முடிந்துவிட்ட அத்யாயம் என்று
மனப் பக்கங்களை அழிக்கிறேன்
அழியாத பக்கங்களை கிழிக்கிறேன்

ஆனலும்...
முற்றுபுள்ளி தாண்டி நீளும் வரிகளை எப்படி முடிப்பது?
காற்றில் கலந்துவிட்ட நம் சுவாசக்காற்றை எப்படி பிரிப்பது?

3 comments:

Sridhar said...

இன்னொரு காதல் செய்வீர்..
முள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும்

jak said...

மிகவும் அருமையான கவிதை

நான் படித்ததில் மிகவும் பிடித்த கவிதை.....

jak said...

மிகவும் அருமையான கவிதை வரிகள்..


நான் ரசித்து படித்ததில் இதுவும் ஒன்று.